பக்கம்:நாயகர் பெருமான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வினரை அழைத்து அவர்களைச் சண்டையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்க எண்ணினார்கள்.

அதற்குக் கைமாறாக மதீனாவின் விளை பொருள்களில் மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் கத்பான் கூட்டத்தாருக்குக் கொடுத்து விடலாம் எனக் கருதினார்கள்.

இந்த எண்ணத்தை அன்சாரி இனத்துத் தலைவர்களிடம் கூறி ஆலோசனை செய்த போது, அவர்கள் பெருமான் அவர்களிடம் ஒருகேள்வி கேட்டார்கள்.

“பெருமான் அவர்களே, இப்படிச் செய்யும் படி ஆண்டவன் கட்டளையிட்டிருக்கிறானா? அன்றித் தாங்கள் எண்ணுகிறீர்களா?” என்று கேட்டார்கள்.

தன் கருத்துத்தான் அது என்று பெருமான் அவர்கள் கூறினார்கள்.

“பெருமான் அவர்களே, ஆண்டவனுடைய கட்டளை இவ்வாறு இருக்கும் என்றால் நாங்கள் அதை மறுத்துச் சொல்ல முடியாது. ஆனால், இது தங்கள் கருத்தாயிருப்பதால், நாங்கள் கூறும் விண்ணப்பத்தையும் கேட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். ஆண்டவனைப் பற்றிய உண்மைகளை அறி வதற்கு முன்னாலே, இந்த மதீனா நகரிலிருந்து விலை கொடுக்காமல் ஒரு பேரீச்சம் பழத்தைக் கூடக் கொண்டு போகமுடியாது—அவ்வாறு கொண்டு போகக் கூடிய ஆற்றல் அந்தக் கத்பான் கூட்டத்-