பக்கம்:நாயகர் பெருமான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

தாருக்குச் சிறிது கூடக் கிடையாது. அப்படியிருக்க, தங்கள் மூலமாக ஆண்டவன் தன் நேர்வழியை எங்களுக்குக் காட்டி மேன்மைப்படுத்திவரும் இக் காலத்தில், வரும்படியில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுத்துவிட முடியுமா? அவர்களுக்கு நாம் நம் வாளைத்தான் நீட்ட வேண்டும்!” என்று அந்த அன்சாரித் தலைவர்கள் கூறினார்கள்.

அன்சாரிகள் தளர்ச்சி யடையவில்லை . சிறிதும் குன்றா வீர உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று அறிந்து பெருமான் அமைதியுற்றார்கள்.

18. நன்றி காத்த நல்ல மனிதர்

ஹனபாக்கூட்டத்தாருக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு சண்டை நடந்தது. அது சிறு சண்டைதான். அந்தச் சண்டையில், அக்கூட்டத்தின் தலைவரான ‘துமாமா’ என்பவர் பிடிபட்டார். முஸ்லிம்கள் அவரைப் பிடித்துக் கொண்டு வந்து பெருமானார் திரு முன் நிறுத்தினார்கள். பெருமான் அந்த மனிதரை நோக்கி, “நீர் எவ்விதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தத் துமாமா என்ற நல்ல மனிதர் கூறிய பதில் இதுதான். “ஐயா, நீங்கள் என்னைக் கொலை செய்தால், முஸ்லிம்களைக் கொன்ற ஒருவனைப் பழிக்குப் பழி வாங்கியதாகும். ஆனால், இரக்கங்காட்டி என்னை