பக்கம்:நாயகர் பெருமான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சிறிது காலத்திற்குப் பின் அவன் தன் நாட்டிற்குத் திரும்ப நேரிட்டது. அப்போது அவன் நேராகப் பெருமானிடம் வந்து சேர்ந்தான். பெருமானை நோக்கி, “உங்கள் கருணையையும், தயாளசிந்தனையையும் பகைவரையும் மன்னிக்கும் உயர் பண்பையும் எண்ணிப்பார்த்த பின்பே உங்களைத் தேடி வந்தேன். ஆண்டவனுடைய திருத்தூதரே, உங்கள் மூலமாகவே இறைவன் எங்களுக்கு நேர்வழி காட்டி நாசமாகாமல் காப்பாற்றினான். நான் தங்களுக்குப் பெருங் குற்றம் செய்திருக்கிறேன். ஆயினும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்று அவன் வேண்டி நின்றான்.

அவன் செய்தது பெருங்குற்றமாயினும், தனக் கிழைத்த குற்றமாக இருக்கவே பெருமானவர்கள் சற்றும் தயங்காமல் அவனை அப்போதே மன்னித்து விட்டார்கள்.

22. பகைவர்களுக்கும் வாழ்த்து

தாயிப் என்னும் ஊரில் தக்கீப் என்னும் கூட்டத்தார் இருந்து வந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களின் பகைவர்கள் என்னும் பேராற்றல் படைத்தவர்கள். முஸ்லிம்களைப் பகைத்துப் போராடிய ஹலாஸீன் கூட்டத்தாரில் சிலர் தாயிப்புக்குச் சென்று அடைக்கலம் புகுந்தார்கள். அக்கூட்டத்தாரை விரட்டிச் சென்ற முஸ்லிம் படை தாயிப்பை முற்றுகை யிட்டது. தக்கீப் கூட்டத்தார்’ தங்களைச் சரணடைந்தவர்களையும்