பக்கம்:நாயகர் பெருமான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

அப்போது ஹஸரத் உமர் அவர்கள் பெருமானின் சட்டை நுனியை ஆத்திரத்தோடு பிடித்துக் கொண்டார்கள்.

“இஸ்லாத்தின் பகைவன் அவன். தாங்கள் ஏன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?” என்று கோட்டார் உமர்.

பெருமான் அவர்களுக்குப் பகைவன் நண்பன் என்ற வேறுபாடு கிடையாது. (உமர், நான் பிரார்த்தனை செய்யத் தான் போகிறேன்” என்று உறுதியான குரலில் கூறினார்கள்.

ஹஸரத் உமர் அவர்களுக்கு ஆத்திரம் அதிகமாகியது.

“அந்த வஞ்சகர்களுக்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி. ஆனால் எழுபது தடவை நீங்கள் மன்னிப்புக் கேட்டாலும் அல்லா அவர்களை மன்னிக்கப் போவதில்லை. திருக்குர்ஆனிலேயே இவ்வாறு தான் அருளப் பட்டுள்ளது” என்று எடுத்துரைத்தார் ஹஸரத் உமர்.

“அவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவோ, கேட்காமல் இருக்கவோ ஆண்டவன் எனக்கு உரிமை கொடுத்திருக்கிறார். நான் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என் உரிமையை நான் நிறைவேற்றுவேன். மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் ஆண்டவன் விருப்பம்!” என்று கூறி விட்டு நபி பெருமான் புறப்பட்டுச் சென்றார்.