பக்கம்:நாயகர் பெருமான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

"அல்லா !”

அஞ்சாது நபியவர்கள் கூறிய இந்தப் பதில் ஏனோ அப்பகைவனை நடுக்கங் கொள்ளச் செய்தது. நடுக்க முற்ற அவன் வகையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது.

பெருமானவர்கள் அவ்வாளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

“இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்? என்று கேட்டார்கள்.

கைவாளை யிழந்த அவன் மேலும் அச்சத்துடன், “தங்களைத் தவிர ஒருவருமில்லை என்று பதிலளித்தான்.

அருள் நிறைந்த நெஞ்சினராகிய பெருமான் அவர்கள், “என்னைக் காப்பாற்றிய அல்லாவே உன்னையும் காப்பாற்றுகிறான்” என்று கூறி அவனை மன்னித்து அனுப்பிவிட்டார்கள்.

29. கடன் தீர்த்த பெருமான்

ஹிஜிரி பதினோராம் ஆண்டில் இஸ்லாம் மார்க்கம் முழுமையெய்தி விட்டதென்றும், பெருமானவர்கள் இவ்வுலகத்தைத் துறக்க வேண்டிய காலம் அணுகிவிட்டதென்றும் இறைவனால் அறிவிக்கப்பட்டது.

உஹதுச் சண்டையில் உயிர் துறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டிய கடமை மீந்திருந்தது. ஆகவே அவ்வீர முஸ்லிம்கள் அடங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவர்கள் மேலுலக நல்வாழ்வு-