பக்கம்:நாயகர் பெருமான்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

களுடன் பின்வாங்குவானோ அவன்: அல்லாவிற்கு எவ்வகையிலும் தீங்கியற்றவியலாது. அல்லாவின் பால் நன்றி காட்டுபவர்களுக்கு அதற்குரிய பலனை அல்லா கொடுப்பான்” என்னும் திருக்குர்ஆன் திருமொழியை உரைத்தார்கள்.

ஹஸரத் அபூபக்கர் அவர்களின் மொழிகளைக் கேட்டபின்னர்தான் பெருமான் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியைப் பலர் நம்பினார்கள்.

துயரம் தாங்கமுடியாமல் ஹஸரத் உமர் அவர்கள் மெய்ந்நடுங்கிக் கீழே சாய்ந்துவிட்டார்கள். சில ஸஹாபாக்கள் மயக்கமுற்றார்கள். சிலர் ஏங்கி ஏங்கி யழுதார்கள்.

நபிமார்களை அவர்கள் மரணமடைந்த இடத்திலேயே அடக்கம் செய்தல் வேண்டும் என்று பெருமான் அவர்கள் கூறியதை நினைவு வைத்துக் கொண்டு, உரிய சடங்குகளை முறைப்படி செய்து முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து அவ்விடத்திலேயே அடக்கம் செய்தார்கள்.

இறையுன் புனிதத் திருத்தலமும்
இனிய நபியாம் திருத்தூதர்
உறையும் புனிதத் திருத்தலமும்
ஒவ்வோர் முஸ்லிம் மைந்தனுமே

-6-