பக்கம்:நாராயணன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரேல்' என்று அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
அப்போது ஒருவன் "அடே நாராயணா, போகாதே போகாதே," என்றான்.
மற்றொருவன், “ பதில் சொல்ல முடியாமல் ஓடுகின்றான் நாராயணன்,” என்றான்.
உடனே மாணிக்கம், "அடே, அவன் போனால் போகிறான். அது ஒரு பயித்தியம். வாருங்கள் நாம் இன்னும் சில பழங்களைப் பறிக்கலாம். ஒரு முறைக்குப் பத்துமுறை எறிந்தால் ஏன் விழாது ? " என்றான்.
அவ்விதமே அவர்கள் நெடுநேரம் கல்லெறிந்து சில பழங்களையும், செங்காய்களையும் வீழ்த்தினார்கள் பிறகு அவர்கள் அவைகளைப் பங்குபோட்டு மகிழ்வோடு தின்று வீடுபோய்ச் சேர்ந்தார்கள்.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/14&oldid=1338916" இலிருந்து மீள்விக்கப்பட்டது