பக்கம்:நாராயணன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினவுதல் வேண்டும்", என்று தீர்மானித்தார். மணி பத்து அடிக்கும் சமயம்.அப்போது பிள்ளைகள் ஒவ்வொருவராகப் பாடசாலையை அடைந்தனர். மாணிக்கம், கோவிந்தன், கந்தன், முருகன் முதலிய பலரும் பாடசாலைக்கு வந்து விட்டனர். பிறகு நாராயணனும் வந்தான்.

நாராயணனைக் கண்டதும் கோவிந்தனுக்கும், முருகனுக்கும் அச்சம் உண்டாயிற்று. ஆதலால், அவர்கள் மாணிக் கத்தைப் பார்த்து, " அடே நாராயணன் வந்துவிட்டான். நேற்று நடந்ததை அவன் உபாத்தியாயரிடம் சொல்லி விட்டால் நாம் என்ன செய்வது?” என்றார்கள்.

அப்போது மாணிக்கம், " நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம் ; நான் இருக்கின்றேன் ", என்றான்.

பிள்ளைகள் யாவரும் வகுப்பில் வந்து உட்கார்ந்தார்கள். அப்பொழுது, ஆசிரியர், "குழந்தைகளே, நான் உங்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/16&oldid=1339750" இலிருந்து மீள்விக்கப்பட்டது