பக்கம்:நாராயணன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன்னை மறந்து பிழை செய்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தீர்மானித்தார். 'பிழை செய்தாலும் உண்மை பேசுகின்ரறேனே',என்று அவருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.ஆனால் அப்போது, அவருக்கு வேறு சில சந்தேகங்கள் தோன்றின. ஆதலால், அவர் நாராயணனை மேலும் சில கேள்விகள் கேட்கலானர்.

ஆசிரியர் : அது போகட்டும்; நாராயணா,பழம் விழுகின்றதா என்று நீ முயன்று பார்த்ததாகச் சொல்லுகின்ருய். அப்படி முயன்று பார்ப்பதற்கு ஒன்றை அடித்து வீழ்த்தினால் போதாதா?

நாராயணன்: ஐயா! நான் ஒரு மாம்பழத்தினையே அடித்து வீழ்த்தினேன்.

ஆசிரியர் : ஆனால் மற்றப் பழங்களை வீழ்த்தியது யார் ?

நாராயணன்:ஐயா,உண்மையில் அது எனக்குத் தெரியாது.

ஆசிரியர்: நல்லது; நீ அடித்த அந்த ஒரு மாம்பழந்தான் எங்கே?

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/19&oldid=1339756" இலிருந்து மீள்விக்கப்பட்டது