பக்கம்:நாராயணன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துவங்கிவிடுவார்; அல்லது பாடசம்பந்த மாகச் சில செய்திகளை முன்னதாகச் சொல்லுவார். அவ்விதம் இன்றி அன்று அவர் பேசாமல் இருந்தது அங்குள்ள பிள்ளைகள் அனைவர்க்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மாணிக்கத்துக்கோ, அதன் காரணம் தெரியுமாதலால் சிறிது அச்சமே குடி கொண்டிருந்தது.

பிறகு அவ்வாசிரியர் சிறுவர்களை நோக்கி, "பிள்ளைகளே, இங்கே ஒரு கள்ளன் இருக்கின்றான். அவன் உண்மையைச் சொல்லிவிட்டால் பிழைப்பான் அல்லையேல், பிறகு அவனுக்கு இன்ன தண்டனை கிடைக்கும் என்பதை நான் இப்போது சொல்லமாட்டேன்,” என்றார்.

ஆசிரியர் இவ்வாறு சொல்லிய போது அந்த வகுப்பு சிறிதும் சந்தடி யின்றி யிருந்தது. மாணிக்கம் நீங்கலாக அங்கே இருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். மாணிக்கம் ஆசிரியரைப் பார்த்தான் ; அவர், தன்னைப் பார்ப்பதைத் தெரிந்து கொண்டதும் ஒன்றும் அறியாதவனைப்போல்

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/38&oldid=1340566" இலிருந்து மீள்விக்கப்பட்டது