பக்கம்:நாராயணன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கம் அவ்வளவு ஆரம்பரங்கள் செய்தும் அந்த ஆசிரியர் அவனையே நன்றாகச் சோதனை போடவேண்டும் என்று எண்ணினார். ஆனாலும் அவனை மட்டும் அழைத்துச் சோதனை போடுதல் நியாயம் அன்று என்று அவர் அங்குள்ள எல்லோரையும் முதலில் இருந்து வரிசையாகச் சோதனை போட்டுக்கொண்டே வந்தார். அவர் அவ்விதம் இரண்டொரு சிறுவனைக்கூட நன்னைறாகச் போடவில்லை. அப்போது நாராயணனும் மற்றச் சிறுவர்களைப் போல் தன் சட்டைப்பையைப் பார்த்தான். அவன் அவ்வாறு பார்க்கும்போது தன் சட்டைப் பையில் ஏதோ ஒன்று நீளமாய் இருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று. ஆதலால், அவன் உடனே அதைக் கையில் எடுத்தான். ஆ! அவன் அப்போது அடைந்த அச்சத்திற்கு ஒர் அளவே இல்லை. அவன் கைகளும் கால்களும் நடுக்க மடைந்தன. பேசுதற்கு நாவும் எழவில்லை; தேளைப் பாம்பைக் கண்டவன்கூட அவ்வளவு

39
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/42&oldid=1340039" இலிருந்து மீள்விக்கப்பட்டது