பக்கம்:நாராயணன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்டாயிற்று. அவர் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பிறகு நாராயணனை நோக்கிப் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். "நாராயணா, இந்தப் பேனா உனக்கு எப்படிக் கிடைத்தது?” "ஐயா, எனக்கு ஒன்றும் தெரியாது. யாரோ இதை என் சட்டைப்பையில் போட்டு இருக்கவேண்டும். இது உண்மை; முற்றிலும் உண்மை.” " ஆனால் எவன் அவ்விதம் போட்டு இருப்பான்?” " அது எனக்குத் தெரியாது.” “எப்போது போட்டிருப்பான்?” "அதுவும் எனக்குத் தெரியாது ஐயா !” "இந்தப் பேனா எவ்வளவு நேரமாக உன் சட்டைப்பையில் இருக்கிறது?" "நான் இதுவரையில் இதைக் கவனிக்கவேயில்லை ; இப்போதுதான் பார்த்தேன். ஆதலால், இதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது.”

41
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/44&oldid=1340130" இலிருந்து மீள்விக்கப்பட்டது