பக்கம்:நாராயணன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மடைந்தார்கள். அவனைப்போல் தாங்களும் இனி எப்போதும் உண்மை பேசி நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

 சிறிது நேரத்திற்கெல்லாம் மாணிக்கமும் நாராயணனும் அங்கே வந்து சேர்ந்தார்கள். நாராயணன் மாணிக்கத்துக்கு வழி முழுவதும் மிக அன்பாகவும்,

அருமையாகவும் பலப்பல நன்மொழிகளைக்கூறிக்கொண்டே வந்தான்.அப்போது மாணிக்கம், "ஆம் இத்தகைய அருமை நண்பனே நான் இதுவரையில் தெரிந்து கொள்ளாமல் இருந்தேனே!" என எண்ணி வருந்தினான். பின்னர், அவன் அதுவரையில் செய்த, பல பிழைகளுக்கும் நாராயணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். மாணிக்கம் பாடசாலைக்கு வந்ததும் ஆசிரியரையும், தன் நண்பர்களையும் பார்ப்பதற்கும் எண்ணம் இல்லாமல் தலை குனிந்து சிறிது நேரம் மெளனமாய் நின்றான்.பிறகு அவன் , தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.ஆசிரியர் அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/61&oldid=1340545" இலிருந்து மீள்விக்கப்பட்டது