பக்கம்:நாராயணன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அதற்கு மாணிக்கம், "அடே, இந்த நாராயணனைப்போல் பயங்கொள்ளி எவனும் இருக்க மாட்டான். நாம் எறிந்து அந்த மாம்பழம் விழுந்து விடுமா?" என்றான்.

 உடனே கந்தன் என்னும் சிறுவன், "அடே, அப்படி விழுந்தாலும் நாம் அதை நம் ஆசிரியரிடம் கொண்டு போய்க் கொடுத்துவிடக் கூடாதா? அப் படிச் செய்தால் அவர் நம்மை அடித்து விடுவாரோ! நாம் நல்ல பிள்ளைகள் என்று நம்மீது மிகவும் அன்பாக இருப்

பார் அல்லவா ?" என்றான்.

அப்போது கோவிந்தன் என்பவன்,"அவ்வளவுதானா! பிறகு அந்தப் பழத்தை அவர் நமக்கே கொடுத்து விடவும் நினைப்பார். அப்படிக் கொடுத்து விட்டால் நாம் அதைப் பங்கு போட்டுக் கொண்டு மகிழ்வோடு தின்னலாம் அல்லவா ?” என்றான்.
 அப்படி அவன் சொன்னபோதே நாக்கில் நீர் ஊறிய கோபாலன் என்னும் சிறுவன்,"அடே, இந்த ஒரு மாம்
            
          ‌‌3‌
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/8&oldid=1339003" இலிருந்து மீள்விக்கப்பட்டது