பரனர் 59 தன்மையேம் ஆயினேம். படாத்தினை மயிலுக்குக் கொடுத்த எம் இறைவன், மதமிக்க யானையையும் மனம் செருக்கிய குதிரையையும் உடைய பேகன். அவனது கைவண்மை மறு பிறப்பை நோக்கி எவ்வளவாயினும் கொடுத்தல் அழகியது என்று கருதியதோ? எனின், அன்று; ஆயின், அது பிறரது மிடியைக் கருதிற்று' என்று பாணாற்றுப் படை யாகப் பகர்ந்தார். - இங்ங்னம் சென்ற புலவர் சிலகாலங் கழித்து மீட்டும் பேகனை நாடி வந்தார்; அவனது அரண் மனையை நோக்கிச் சென்றார்; பேகனைக் கண்டாரில்லை; கண்ணிரும் கம்பலையுமாக நின்று கொண்டு இருந்த அவ ன து மனைவியைக் கண்டார்; மனம் வருந்தினார்; ப்ேகன் அரண் மனையில் இல்லாததற்ரும் அவள் வருந்துவதற்கும் உற்ற காரணத்தை உணர்ந்தார்; உடனே பேகன் இருந்த இடத்தை உணர்ந்து அங்குச் சென்றார். அவர் அவனை நோக்கி, - "இளையோய்! நீ, அருள் அற்றிருத்தல் கொடிது; மாலைக் காலம் வந்த அளவிலே சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி' என்னும் பண்ணிலே நினது வளமிக்க நாட்டையும் நினது கொடைத் திறத்தையும் நினைந்து பாடினேமாக: நறுநெய்தல் போன்று பொவிந்தமையுண்ட கண்களினின்றுங் கலங்கி வீழ்ந்த இடைவிட்ட துளிகள் அ னி ந் த மார்பை நனைப்ப,