பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

13



முதியவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் வினாக்கள் இவை. அவர்களுக்கே பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விடுகிறது. வேறு என்ன வினவ முடியும்? பிள்ளைகள், பேரன்கள், பேர்த்திகள் என்று கேட்டு அலுத்துவிட்டனர்.

இந்த உடம்பினைத் தவிர்த்து வேறு கேள்விகளில் அவர்கள் தடம் புரள்வதில்லை; அவர்கள் நோக்கம் என்ன? ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? அவன் உலகுக்குச் சுமை; ஏன் இப்படி இழுபறியாக இருக்கிறான்?” என்பதுதான் வினா. இளமை நில்லாது; முதுமை விலை போகாது; யாரும் மதிக்க மாட்டார்கள், இஃது இயற்கையின் நியதி.

“சரி, வயது ஆகட்டும்; காலம் வரும்; பிறகு தருமம் செய்யலாம்; இப்பொழுது வளமாக வாழலாம்” என்று இயம்புகிறான்.

இறுமாப்பு உடைய இளைஞன் அவன்.

“தம்பி! காற்றடித்தால் பழம் மட்டும் உதிர்வது இல்லை; செங்காயும் சிதைகிறது; உதிர்கிறது; நீண்ட நாள் வாழ்வது உறுதி இல்லை; அதனால், முடிந்த, வாய்ப்புள்ள நாள்களில் எல்லாம் அறம் செய்க! அதுவே தக்கது.

“ஆள் தேடும் படலத்தில் அந்தக் கறுத்தவன் சுற்றிக் கொண்டே இருக்கிறான்; ‘மாதம் இத்தனை வழக்கு’ என்று பதிவு செய்ய வேண்டும் என்பது காவல்துறைக் கட்டளை போலும்! சும்மா இருப்பவனையும்