பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


சிறை வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகாது, விடுதலைபெற்று வீறுடன் வாழ்க, அறம் செய்க. இங்கே இவனைப் பற்றி என்ன சொல்வது? அவனவன் கொடுத்துப் புகழ் பெறுகிறான்; இவன் தன்னைக் கெடுத்துக்கொண்டு இகழ்வு பெறுகிறான். மானம் கெட்ட வாழ்வு; வீட்டு முகப்புகளில் அந்த அந்த வீட்டுப் பதுமைகள் தரும் அகப்பைச் சோற்றுக்குக் கையேந்தி நிற்கிறான். “உயிர் போகிறது; பிடி சோறு” என்று கேட்கிறான். இந்த உயிரை வைத்துக் கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான்?

“சோம்பல் மிகவும் கெடுதி, போ உழைத்துப் பிழை, உழைக்க நிமிர்ந்து நில்; பிறர் கையேந்தி நிற்காதே; திட்டமிட்ட வாழ்க்கை அமைத்துக் கொள்க; எதிலும் அளவோடு வாழ்வது என்று உறுதி கொள்க. பிச்சை எடுக்க நேராது பிறர் உழைப்பின்றித் தருவதைத் துச்சமாக மதித்து நட. பிச்சை எடுப்பது பிசகான செயல்; அது மாபெரும் வீழ்ச்சி, மானிடத்துக்கே அது தாழ்ச்சி.”


5. இவளா அழகி யோசித்துக் கூறு
(தூயது அன்மை)

அவள் ஆடை சற்ற விலகுகிறது; அவன் அவளைச் சாடைகாட்டி அழைக்கிறான்; பெண் வாடை வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்தவன்தான்; அவள் மேனி அழகு கண்டு தேனி போலச் சுற்றி வட்டமிடுகிறான்.