பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

45


வெவ்விது; எதனாலும் அடக்க இயலாது; அம்பும், நெருப்பும், காய் கதிரும் புறத்தைச் சுடும்! காமம் அகத்தைச் சுடும் ஆற்றல் மிக்கது. அதனால் நெருப் பினும் காம விருப்பு மிகுதியும் அஞ்சத்தக்கது ஆகும்.

ஊரே பற்றி எரிகிறது; எரிந்தால் என்ன? ஏரி குளம் உண்டு; அங்குப் பதுங்கிக் குளிர் பெறலாம். காமம் கட்டுக்கு அடங்காது. அஃது எரிந்தால் தப்பித்துக் கொள்ள ஏமமே இல்லை.


10. கைக்கு அழகு தருவது ஈகை
(ஈகை)

ஈவது தான் கை கைக்கு அழகு தருவது கொடைப் பண்பு; வற்றிவிட்ட பிறகு ஊற்றாக வரும் நீர்ப் பெருக்கு; அது பிறர் வேட்கை தீர்க்கும்; தாகம் எடுப்பவர்க்கு அது உதவுவது; நன்கொடை, கைப்பொருள் அற்ற நிலையில் பையைத் தேடித் துழவித் தருகிறானே அதுதான் பெருமை. உற்றவன் கொடுக்கிறான் என்றால் அது வெறுமை; உலகப் புகழ்மை; அது காட்டாது மெய்ம்மை. கொடையோடு பட்ட குணன் உடைய வர்க்குச் சுவர்க்கத்தின் கதவு அடையாது. சுவர்க்க வாசல் புகுமுன் அங்கே உள் நுழைவதற்கு ‘விசா’ வேண்டும்; அஃது அவன் கொடுத்துச் சிவந்த கைகள்; அவற்றைக் காட்டினாலே அனுமதி, அவனுக்கு வெகுமதி.

“வயது உனக்கு என்ன?” “அறுபத்தி ஆறு”; “மூப்பு உன்னை அடைகிறது; நோய் இன்னும் அதற்குப்