பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குழிவிழுந்த கண்: பனம் நுங்கு; நுங்கு எடுத்துவிட்ட குழி; பயங்கரமாக இல்லையா! இவளா அழகி? யோசித்துக் கூறு."

"அவள் நகை முல்லை முகை என்பாய்! நீ கூறுவது எல்லாம் வெறும் மிகை, அதோ சிதறிக் கிடக்கிறதே எலும்புத்துண்டு. அது நீ புகழ்ந்து பேசிய அதி அற்புதப் பல்; பல் என்று நீ இப்பொழுது கூறமாட்டாய். அது வெறும் கல். இதனை அறிந்து கொள்."

"நில்! அது வெறும் எலும்புத்துண்டு என்று சொல். நீ ஒரு ஞான சூரியன்; யாரோ சொன்னார்கள். 'தொகு முகை இலங்கு நகை' என்று பிறர் சொல்லக் கேட்டுப் பேசுகிறாய். அது கவிதை, முல்லை; அது பல் என்று மாற்றிக்கூறி மகிழ்கிறார்கள். 'பல் அழகு' என்றுசொல்லிக் கொண்டிருந்தால் அது பொய்; அது வெறும் எலும்புச்சில்; யாரோ இப்படித் தவறாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். பெண்ணை நீ மதிக்கலாம்; வேண்டுமானால் தெய்வம் என்று துதிக்கலாம்; விருப்பம் இல்லை என்றால் வெறுத்து ஒதுக்கலாம். ஆனால் அழகி என்று அளக்காதே."

செத்துவிட்டாள் ஒருவன் காதலி, வண்டி ஏறி அவள் வகைப்பட்டுவிட்டாள்; மனையில் கொண்டு சென்று மருத்துவர் அவள் சாவின் அருத்தத்தை ஆராய்கின்றனர். காதலியைத் தேடிக்கொண்டு அந்தக் காரிருளில் கனவேகத்துடன் 'அறுப்பு மனையில்' நுழைகிறான். கருப்பு அங்கி அவளை மூடி இருந்ததால் அவள் முகத்தை மட்டும் காட்டினர் அஃது அவன் காதலி என்பதை அறிவிக்க. 'இது முகம்; அவள் எங்கே?' "அதோ அறுத்துக்கூறுபடுத்தி வேறு வேறாக வைத்திருக்கிறோம், குடல், கொழுப்பு, நரம்பு, எலும்பு, தசை, நார்கள் நன்றாகப் பார்; இவள்தான் உன் காதலி!"