பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


"நீ கூறும் காதலி வேறு எத்திறத்தாள்? கூட்டிக் கழித்துப் பார்; அவள் ஒரு சதைக் கட்டு, குருதிக் கொட்டு."

"மேனி மாசற்ற பட்டு" என்று பிதற்றுவாய். 'அவள் பேரும் பட்டுதான்'. எடு கொஞ்சம் துட்டு. இங்கே அவளைக் கொண்டு வந்த அறுவடைக்காரருக்குக் கூறு போட்டுத் தரவேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் அழகாக மூடி அவளைத் திருப்பித் தருவார்; இதை 'மாமூல்' என்பாய்; 'சகஜம்' என்போம்; அவர்கள் சுடுகாட்டில்கூட விடமாட்டார்கள்; கொடுத்தாக வேண்டும்; செத்தவள் உயிர் பிழைத்து வரப்போவது இல்லை. இவளா அழகி? யோசித்துக் கூறு".

"பட்டுத்துகில் உடுத்திப் பகட்டான தோற்றத்துடன் பட்டம்மாள் காட்சி அளிக்கிறாள்; சந்தனம் பூசிச் சவ்வாது பொட்டிட்டுக் கமழ்கிறாள். மல்லிகைப்பூ மணக்கும் கூந்தல் அவ்வல்லிக் கொடிக்கு; எல்லாம் மேற் பூச்சு; இவற்றைக் கண்டா அவள் பேரழகி என்று பிதற்றுகிறாய்? ஊறுகாய் டப்பாவுக்கு பிளாஸ்டிக் மூடி போட்டால் அது பளபளக்கத்தான் செய்யும். அலங்காரம் கண்டு அதுகாரம் உடையது என்று பேரம் பேசுவது அறிவுடைமையாகாது; அழுகலைத்தான் ஊறுகாய் என்கின்றனர். அது புளிக்கத்தான் செய்யும், அதைத் தின்று நீ களிக்க நினைக்கிறாய். உள்ளே இருக்கும் பண்டம் எது என்று அறியாத முண்டங்கள் சிலர் 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று எதையும் மேற்போக்காகப் பார்த்து அதுதான் மெய்ம்மை என்று கருதுவர். சேலையும் பூவும் அழகுடையவைதாம்; அவற்றைக் கண்டா அவள் அழகி என்கிறாய்? ஊறுகாய் டப்பா; அல்து உடம்புக்கு ஆகாது."