பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163- இன்பவியல் - ன்ப இயல் 39. கற்புடைய பெண்டிரின் உயர்தகைமை பெறுதற்கு அரிய கற்புடைய இந்திராணி போன்ற பெரிய புகழ் மிக்க பெண்ணேயாயினும், தன்னை விரும்பி அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின் வந்து நிற்கின்ற திய ஆடவர் உருவாகாதபடி தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய-நறுமணமிக்க நெற்றியுடைய மனைவியே கணவனுக்கு நன்மை புரியும் துணைவியாவாள். 381 ஒரு குடத்து நீரைக்கொண்டே சமைத்து உண்ணத்தக்க நெருக்கடியான நேரத்திலும், கடல் அளவு நீரும் வற்ற உண்ணும்.அளவு உறவினர் மிகுதியாக வந்துவிடினும், விருந்தோம்பும் கடமைப் பண்பை ஒழுக்க நெறியாகக் கொள்கிற - மென்மையான மொழிபேசும் பெண்ணே மனைவாழ்க்கைக்கு மாண்பு அளிப்பவ ளாவாள். 382 நான்கு பக்கமும் இடிந்து வழியுடையதாய், மிகவும் சிறியதாய், எல்லாவிடத்தும் மேல் கூரை வழியாக உள்ளி ருப்பவர்மேல் மழைத்துளி சொரியக்கூடியதாய் இருப்பினும், மேலான அறங்கள் புரிய வல்லவளாய், தான் வாழும் ஊரார் தன்னைப் புகழும்படியான சிறந்த கற்புடைய இல் லத்தரசி இருக்குமிடமே சிறந்த இல்லமாகும். გ83 கணவனது கண்ணுக்கு இனியவளாய்,கணவன் விரும் பும் வகையில் அழகுசெய்து கொள்பவளாய், அச்சமுடைய வளாய், ஊரார்க்கு நானும் கூச்சம் உடையவளாய், கணவனுக்கு அஞ்சி, இடம் அறிந்து அவைேடு ஊடல் (காதல் விளையாட்டுக் கோபம்) கொண்டு, இன்பமாகக் கணவனது நிலை உணர்ந்து ஒழுகும் மடமொழி பேசும் மாதுதான் சிறந்த மனைவியாவாள். 384 எந்நாளும் எம் கணவர்\எம் தோள்மேல் அணைந்து எழுந்தாலும், அந்த முதலிரவிநாளில் கண்டது போலவே இந்த நாளிலும் யாம் மிகவும் நாணிக் கூசுகிருேம். ஆல்ை, எப்போதும் பொருள் விருப்பத்தால் பலரது மார்பைத் தழுவி வாழும் பரத்தையர் எப்படித்தான் தழுவுகின்றனரோ? 385