பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 30 6. தீவினையச்சம் துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு;-தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட புல்லறி வாளர் வயிறு. 51 இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க் காளாய்க் கரும்பார் கழனியுள் சேர்வர்;-சுரும்பார்க்கும் காட்டுளாய் வாழும் சிவலும் குறும்பூழும் கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். 52 அக்கேபோல் அங்கை ஒழிய விரலழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே;-அக்கால் அலவனேக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். 53 நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வது உம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்;-பரப்பக் கொடுவினையர் ஆகுவர் கோடாரும் கோடிக் கடுவினயர் ஆகியார்ச் சார்ந்து. ... - 54 பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்;-வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு. 55