8 - நாலு பழங்கள்
வில்வித்தையில் சிறந்தவன். நகுலன் ಅಥಿಣTಶರ್ಶಿ ஒட்டுவதில் வல்லவன். சகாதேவன் பெரிய ஞானி.
இந்தப் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்யும்படி நேர்ந்தது. அந்தக் காலத் தில் ஒரு நாள் துர்வாச முனிவர் அவர்களிடம் வந்தார். 'தர்மராஜாவே, நான் காட்டில் தவம் செய்கிறேன். எனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய யாராவது இருந்தால் நல்லது என்று நினைக் கிறேன். என்மனம் அறிந்து வேலை செய்யும் ஒருவன் வேண்டும்' என்று தர்மரைப் பார்த்துச் சொன்னர். தர்மர், நாங்கள் ஐந்து பேர் இருக்கிருேம். எங்களுக்குள் யாரைத் தாங்கள் விரும்பினலும் வருகிருேம்' என்ருர். -
துர்வாசர் வீமன் பலசாலியாக இருப்பதைப் பார்த்து அவனையே அழைத்துக்கொண்டு சென்ருர், வீமனும் நல்ல காரியம் செய்ய வாய்ப்புக் கிடைத் தது என்று அவருடன் போனன்.
'முனிவர் பெருமானே, நான் எந்த விதமான பணிகளைச் செய்யவேண்டும்?' என்று வீமன் கேட் டான். - -
நான் காலேயில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். அதற்குப் பல்குச்சி கொண்டு வந்து தர வேண்டும். பிறகு நீராடவேண்டும். அதற்கு மலையடி வாரத்திலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும். ஜபதபங்கள் முடிந்த பிறகு நான் உண்ணுவதற்குப் பழங்களைப் பறித்துக்கொண்டுவந்து தரவேண்டும்’