இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அந்த அரசனுடைய மனைவிக்கு ஒரு தம்பி இருந்தான். அவளுக்கு. அவனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிடவேண்டும் என்று ஆசை. அரசனுக்கு மிகவும் வயசான மந்திரி ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர்; புத்திசாலி; உலக அனுபவம் மிக்கவர்.
"எவ்வளவு நாளைக்கு இந்தக் கிழட்டு மந்திரியை வைத்துக் கொண்டிருப்பீர்கள்? அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு என் தம்பியை மந்திரியாக்குங்கள்" என்று அரசி நச்சரித்து வந்தாள்.