இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தைக்கு அம்மா பாடம் சொல்லிக் கொடுத்தாள். சின்னச் சின்ன வாக்கியங்களாக அதற்குச் சொல்லிக்கொடுத்து அதை ஒப்புவிக்கச் சொன்னாள். நாம் அடிக்கடி காணும் பொருள்களையெல்லாம் காட்டி, அவற்றின் பெயர்களை வாக்கியங்களில் வைத்து, அந்த வாக்கியங்களைச் சொல்லிக் கொடுத்தாள். குழந்தை அந்த வாக்கியங்களை அப்படியே ஒப்புவித்தது. அதன் குரல் கணீர் என்று இருந்தது.