24 நாலு பழங்கள்
இரவு வந்து விட்டது. ஆறு மணிக்கே சாப் பிட்டு விட்டுக் குழந்தை படுத்து உறங்கி விட்டது. ஆனல் பாதி ராத்திரியில் அதற்கு விழிப்புக் கொடுத்து விட்டது. தான் அறிந்த விஷயங்களைச் சொல்லிப் பார்க்கவேண்டும் என்று அதற்குத் தோன்றியது. பாடம் படிப்பது போல அந்த வாக்கி யங்களைச் சொல்ல ஆரம்பித்தது.
அப்போது அந்த வீட்டில் திருடுவதற்கு இரண்டு திருடர்கள் வந்தார்கள். சுவரில் கன்னம் போட்டு உள்ளே புகுந்து திருடுவதாக எண்ணி வந்திருந்தார்
ᏧᏠ$©ᎥᎢ .
அப்போது குழந்தை சற்றுப் பலமாக, தென்ன மரம் நிற்கிறது” என்றது. அந்த வார்த்தைகள் திருடர்களின் காதில் விழுந்தது:
'யாரோ விழித்துக் கொண்டிருக்கிருர்கள். நாம் போய் விடலாம்” என்று ஒரு திருடன் சொன் ன்ை.
போடா பைத்தியக்காரா! இவ்வளவு தூரம் வந்து விட்டுச் சும்மா போவதா? ஏதோ குழந்தை தூக்கத்தில் உளறுகிறது. அதைக் கேட்டுப் பயப்பட லாமா?’ என்ருன் மற்ருெருவன்.
உடனே கன்னக்கோலை எடுத்துச் சுவரைத் துளை போட்டுப் பறிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது குழந்தை, பெருச்சாளி பறிக் கிறது' என்றது. அதைக் கேட்டுத் தைரியம் சொன்ன திருடனுக்கே சந்தேகம் வந்து விட்டது. உற்றுக் கவனித்தான்.