அதிசயப் பெண்
37
"காய்கறி சோறு எல்லாவற்றையும் படைக்கும் இலைதான் ஆதார வஸ்து. சாப்பிட்டால் அதை எறியாமல் என்ன செய்வது?" என்று சுகுமாரன் சொன்னான்.
"வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் நான் கலந்து வைப்பதை நீங்கள் பார்த்ததுண்டோ?" என்று அவள் கேட்டாள்.
"தினமுந்தான் செய்கிறாய். வேகாத இலை வெற்றிலை; வெட்டின காய் அடைக்காயாகிய பாக்கு; வெந்த கல் சுண்ணாம்பு; இந்த மூன்றையும் நீ கலந்து தராவிட்டால்தான் எனக்குப் பிடிக்காது" என்று சுகுமாரன் சந்தோஷத்துடன் சொன்னான்.
"அந்தக் குழம்பைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று வித்தியாவதி அடுத்த கேள்வி கேட்டாள்.
"அது சந்தனக் குழம்பு என்று எனக்குத் தெரியாதா? வேகாத கட்டை சந்தனக்கட்டை; அதன் குழம்பு சந்தனக் குழம்பு. அதனை என்மேல் நீ ஊற்றினால் எனக்கு மகிழ்ச்சிதான் உண்டாகும்."
"இரண்டு மாட்டின் மேல் தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கடைசிக் கேள்வியைக்கேட்டாள் வித்தியாவதி.
"நான்கூடத்தான் கால்மாடு, தலைமாடு ஆகிய இரண்டு மாட்டின் மேல் தூங்குகிறேன். நீ தூங்குவது அதிசயம் அல்லவே!" என்று சுகுமாரன்