44
நாலு பழங்கள்
டாருக்கோ அவர் ஏதோ பொறுப்புள்ள அரண்மனை உத்தியோகத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்ற கௌரவ புத்தி உண்டாயிற்று. இவர் என்ன செய்கிறார்?" என்று அறிய எண்ணிய யாரோ சிலர் அவர் ஏகாக்கிர சித்தத்தோடு வேலை செய்வதைப்பார்த்து, குறுக்கிட விரும்பாமல் போய் விட்டார்கள். அவர் உத்தியோகம் யாதொரு தடையுமின்றி இவ்வாறு நடைபெற்று வந்தது.
ஒரு நாள் அரண்மனையில் ஒரு தங்கப் பாத்திரம் காணாமல் போயிற்று. எங்கெங்கோ தேடிப் பார்த்தார்கள்; கிடைக்கவில்லை; யார். திருடினார்கள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. பல வகையில் ஆராய்ச்சி செய்து விசாரித்தபோது, அன்று மாலையில் அதை யாரோ ஒருவன் எடுத்துப் போயிருக்கிறான் என்று தெரிய வந்தது. அரண்மனைக்கு அடிக்கடி வந்து போகும் பழக்கமுடைய அவனைச் சந்தேகித்துச் சோதனை போட்டார்கள். பண்டம் அகப்படவில்லை.
யாரோ ஒருவர், "இந்தத்துப்புத்துலங்க வேண்டுமானால் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இதோ இந்தச் சாலையில் ஒரு மகாராஷ்டிரர் இருக்கிறார். அவர் ஒரு பைத்தியக்கார. உத்தியோகம் பார்த்து வருகிறார். அவரிடமுள்ள குறிப்புக்களைப் பார்த்தால் நமக்கு ஏதாவது உளவு கிடைக்கலாம்" என்று சொன்னார். அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அதையும் பார்த்து விடலாம் என்று எண்ணி அந்த மகாராஷ்டிர கனவானுடைய உத்தியோக்சாலைக்கு வந்தார்கள்.