பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி i si i

- 566)ಹಗಿGುಗ್ಧ, திருந்திய முழுமையைத் தேடுவதிலோ அக்கறையும் சத்தியவேட்கையுமில்லாத மனிதர்களே அங்கு. நிரம்பியிருந்தார்கள். பணம், திடீர்ப் புகழ், அதிர்ஷ்டம் யோகக்காரனாவது போன்ற தவிப்புக்களோடு ஊடாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்கும் கடினமாக உழைப்பதில் அதிக நம்பிக்கை இருந்ததாகத் தெரிய வில்லை. -

பாபுராஜின் கையிலிருந்த வசனக் கோப்புக்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தில் விரித்திருந்த பக்கத்தை எட்டிப் பார்த்தான். முத்துராமலிங்கம். - - தமில்த்தாயின் தணிப்பெருமைக்கு உறிய கர்ப்புக் கறசிகளின் இறத்தம் எண் உடலிலும் ஒடுகிரதடா பாவீi' . . -

என்று எழுதியிருந்தது. கற்பழிக்க வ்ந்த முரடா களிடம் அகப்பட்டுச் சிக்கிக்கொண்ட பெண் பேச வேண்டிய வசனம் போலும் அது. புரிந்தாலும் ஆவலை அடக்க. முடியாமல், . . . . . . -

என்னங்க இது'-என்று பாபுராஜையே கேட்டு வைத்தான் முத்துராமலிங்கம். - . .

"டயலாக்...அந்தப் பொம்பிளை அவனுகளை எதிர்த்துப் பேசவேண்டியதுப்பா. - .

"டயலாக்லே கற்பு ரொம்பப் பலவீனமா இருக்குதும் களே?...அழுத்தமே இல்லியே?’’

எதைச் சொல்றே.

'இல்லே கர்ப்புன்னு இருக்கே...'

"ஆமா இருந்தா என்ன?".

"இப்போ நாம் ಹTಿಲಗಕಶ வேண்டியது ரெண்டு: பேரோட கற்புன்னு தெரியுதுங்க. ஒண்னு அந்தப் பொன் ணோடது. இன்னொண்னு தமிழ் மொழியோடது.'