பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 36 - - நிசப்த சங்கீதம்

தியாகி சிவகாமிநாதனின் பேரோடு முத்துராம. லிங்கத்தின் பேரையும் சேர்த்துப் பெரிய பெரிய வண்ணச் சுவரொட்டிகள் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டன . . சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் பெரிய பெரிய சுவரொட்டிகளில் முத்துராமலிங்கத்தின் பெயரைப். பார்த்ததும் ஒருநாள் காலை பாபுராஜ் மெல்ல ஆரம்பித். தான். - -

"இன்னாப்பா! பெரிய ஸ்பீக்கர் ஆயிட்டியாமே?”

嫌 證 * *

முத்துராமலிங்கம் உடனே இதற்குப் பதில் எதுவும்: சொல்லவில்லை. .

"ஊர்ல இருக்கற சுவர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் போஸ்டர் அடிச்சு உன் பேரை ஒட்டியிருக்குதே' .

螺赠 筹疆 路 象衰 鱼 翌哆 够 曝 ●‘感举够

"இந்த சிவகாமிநாதன்கிற ஆளு பொழைக்கத் தெரி

யாத மனுசன்...அவங்க கட்சி இங்கயும், டெல்லியிலேயும்

செல்வாக்கா இருந்தப்பவே யாரையாவது பிடிச்சுக் கையிலே கால்லே விழுந்து கெஞ்சிக் கதறி மந்திரியா வந்தி: ருக்கலாம். அதுக்குக் கையாலாகாமே ஊருல இருக்கறவன்

களை எல்லாம் பத்திக் கொன்ற சொல்லிக் கொறை சொல். லியே உருப்படாமப் போயிட்டாரு...'

மேய்ப்பவன் பாதையில் இழுபட்டு, அடிபட்டுப் பலி யாகப் போகும் ஒரு மந்தை கொழுத்த செம்மறி ஆடுகளை

விடச் சுதந்திரமாகக் கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் பசி உயர்ந்தது. சிவகாமிநாதன் ஒரு மந்தை ஆடுகளில் ஒர் ஆடு இல்லை. ஒற்றைத் தனிச் சிங்கம் அவர்...' ಗ್ಲ :

சிங்கமோ, அசிங்கமோ பொழைக்கத் தெரியாத, மனுசன். : .

  • . "இங்கே பொழைக்கத் தெரிஞ்சவங்கங்கிறதுதான் யாரு கயவர்கள், கோழைகள். இடைத்தரகர்கள், அடி