பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 罩4留

சூரிய பகவான் கிட்டமட்டும் வாங்கலே! மறந்துட்டாங்க... அவரு தகராறு பண்ணிட்டாரு. * , .

சண்முகமும் அவனும் அறைக்கு வந்து ஒய்வெடுத்துக் கொண்டார்கள். முதல் நாள் மங்கா கேட்டுக் கொண்ட படி அவளை அன்று மாலை சந்திக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் முத்துராமலிங்கம். . .

பகல் இரண்டு மணிக்கு மேல் அவன் மங்காவைச் சந்திக்கப் புறப்பட்டபோது லாட்ஜிலுள்ள டெலிபோனில் பாபுராஜ் அவனைக் கூப்பிடுவதாகப் பையன் வந்து சொன்னான். .

எரிச்சலோடு போய் ஃபோனை வாங்கிப் பேசினான் முத்துராமலிங்கம். - .

நீ உடனே இங்கே வர முடியுமா?" "எங்கேன்னு சொல்லவியே?" பாபுராஜ் இடத்தைச் சொன்னதும், "இன்னிக்கு இனிமே நான் எங்கேயும் வரமுடியாது. குன்றத்தூர் அவுட்டோர் இல்லேன்னதும் வீட்டுக்குப் போலாம்னிட் டீங்க. அதை நம்பி நான் எனக்கு ரொம்பவேண்டிய ஆள் ஒருத்தரைப் பார்க்க வரேன்னிட்டேன். இதோ புறப் பட்டுக்கிட்டேயிருக்கேன்.'

வேலை முக்கியமா? யாரோ ஆளைப் பார்க்கிறது .

. முத்துராமலிங்கம் பதில் சொல்லாமல் டெலிஃபோனை வைத்துவிட்டுப் புறப்பட்டான். ஒடவும் விடாமல் நிற்கவும் விடாமல் பாபுராஜ் கழுத்தறுப்புச் செய்கிறானோ என்று. சந்தேகமும் எரிச்சலும் வந்தன அவனுக்கு. மறுபடி ஃபோன் ம்ணி அடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று விரைந்தான் அவன். - - - -

- சாலைக்கு வந்து பரக்கப் பரக்கப் பஸ் பிடித்துப் போன் போது மூன்றே கால் மிணிக்கு மேல் ஆகிவிட்டது. சன்