பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நிசப்த சங்கீதம்

"கசப்பு காலையில்ே எந்திரிச்சதும் பல்வெளக்கிப் போட்டு ஒரு கைநெறைய தளதளன்னு வேப்பங்கொழுந் தைப் பறிச்சுத் திம்பேன். பொழுது சாயறப்பவும் மறுபடி அதேமாதிரி..." - -

"ஐயையோ......கசந்து வழியும்......குமட்டிக்கிட்டு. வருமே?” - -

"பழகிட்டா கசப்பைப் போலச் சுவையானதும் ஆரோக்கியமானதும் வேறே இருக்க முடியாது...மிஸ் மங்கா...'

அவன் பேசி முடிப்பதற்குள், -

"என்ன மங்கள் ஸ்வீட்டை வெச்சுக்கிட்டு இங்கேயே பேசிக்கிட்டு நின்னா எப்படி..? அப்பா மந்திரியாயிட்டாரு, கட்சிக்காரங்கள்ளாம் காத்துக்கிட்டிருக்காங்க...உங்கை யாலே அவங்களுக்கெல்லாம் நீயே ஸ்வீட்ஸ் குடும்மா'. என்று ஒருத்தர் வந்து அவளை அழைத்துச் சென்றார். அவனுக்கு விடை கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அவரோடு உள்ளே விரைந்தாள் அவள்.

அன்று அந்தப் பங்களா காம்பவுண்டைக் கடந்து தெரு. வுக்கு வருவதற்கு முத்துராமலிங்கம் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது, மக்கள் வெள்ளத்தில் நீந்தி மிதந்து சட்டை கசங்கித் தலைமயிர் கலைந்து கூட்டத்தில் தன்னைச் சொருகிக் கொண்டு நுழைந்துதான் அவன் வெளியே வர முடிந்தது. - - - - ஆரடிக்கு மேல் உயரமாகவும் கட்டுமஸ்தாகவும் இருந்: தானோ, பிழைத்தானோ, இல்லையென்றால் கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டு இறந்துபோய் அடுத்த நாள் காலைப் பத்திரிகையிலும், மாலைத் தினசரியிலும் பரபரப்பான வெறும் செய்தியாகியிருப்பான் அவன். - -

முன்றரை ഥഞ്ചിത്രമേഖ காத்திருந்து மதுரை மத்திய பஸ் நிலையத்தில் கம்பம் போகிற எக்ஸ்பிரஸ் பஸ் ஏறி