பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 . நிசப்த சங்கீதம்

தூக்கிப் போட்டுக்கிட்டுப் போக முயற்சி பண்ணலாம். என்ன வேணும்னாலும் நடக்கும். -

நான் அதுக்குச் சம்மதிச்சாத்தானே?"

"பலவந்தமா வீடு புகுந்து தூக்கிக்கிட்டுப் போக லாம். னு .ெ ந ைன க் கி ற ப் ப உ ன் சம் ம த த் ைத யாரும்மா கேட்டுக்கிட்டு வரப்போறாங்க. இப்போ என்னையும் என் மகளையும் பத்திக் கன்னா பின்னான்னு, மேடையிலே பேசிக்கிட்டிருக்காங்களே, அதுக்கு என்ன் நோக்கம் தெரியுமா எனக்கும் முத்துராமலிங்கத்துக்கும் ஆத்திரமூட்டனும், அந்த ஆத்திரத்திலே நாங்க உன் மேலே வெறுப்படைஞ்சு, "எல்லாத்துக்கும் உங்கப்பாவை விட்டு நீ இங்கே வந்ததுதாம்மா காரணம். பேசாமே நீ திரும்ப வீட்டுக்குப் போயி உங்கப்பாறோட இரு'ன்னு: சொல்லி உன்னை அங்கே அனுப்பிடுவோம்னு எதிர் பார்க்கிறாரு.' .

உயிர் போனாலும் நான் அப்படிச் செய்யப் போற. தில்லே." -

'அடடே... விஷயத்தைப் புரிஞ்சுக்காமப் பேசறி யேம்மா. நீ போயிடுவேன்னு நான் சொல்ல வரலே... உன்னை எப்பிடியாவது எங்க தரப்பிலேருந்து பிரிச்சுக். கொண்டு போயிட அவங்க முயற்சி பண்ணுவாங்கன்னு. தான் சொன்னேன்.' - . . . -

"நீங்க சொல்றது சரிதான். இப்பிடி ஏதாவது செய்துடலாம்னு அவங்க புத்தி குறுக்கு வழியிலேதான் வேலை பண்ணும், உங்களுக்கோ எனக்கோ முதல்லே மறை, முகமாகவும் அப்புறம் நேரடியாகவும் தொந்தரவு கொடுத்தா நாம ரெண்டு பேருமே இவளைக் கைவிட்டுடு வோம்னு அவங்களுக்குத் தோணும்' என்றான் முத்து. ராமலிங்கம். - r

அப்பாவோட அரசியல் தகிடுதத்தங்களும் ஊழலும் பிடிக்காமேதான் எங்க ண் ண ன் வெளிநாட்டிலேயே