பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 . நிச்ப்த சங்கீதம்

அவனது கையில் பாரதியார் கவிதைத் தொகுதி இருந்தது. பெட்டியில் இருந்ததை எடுத்துக் கொண்டிருந்தான். ஆந்த வீட்டில் தங்குவதற்கு அவன் அருவருப்பு அடைய வில் ைல; . -

அழுக்குமயமான குப்பைமேட்டில் கூச்சப்படாமல் அமர்த்து எதிரே தேடிவந்து நின்ற அரசனிடம், யாம் இருக்க நீர் நிற்க'- என்று சொல்லிய ஞானியைப்போல் அருவருப்பின்றி இருந்தான் அவன். எங்கே இருக்கிறோம். என்பதுவான் முக்கியம் என்று எண்ணினான் அவன்.

அதற்குத் தலைவனான சின்னியின் மரியாதைக்குரிய நண்பன் என்பதால் அங்கே எல்லோரும் அவனுக்குத் தலை வணங்கினார்கள். அவனுக்கு மரியாதை செய்தார்கள். மொட்டை மாடியிலிந்ந்து கொண்டு அவன் பாரதியார் கவிதையை இரசித்துப் படித்துக் கொண்டிருந்தபோது. வெளிச்சத்துக்காக மாடியிலிருந்து கீழே கம்பிப் பலகளிை வைத்திருந்த ஒரிடத்தின்வழியே, நல்றதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?" என்ற பாரதி பாடலின் இனிய அடியைக் கீழேயிருந்து யாரோ பெண்குரல் ஒன்று மிக நளினமாகப் பாடுவது. கேட்டது. . - .

அந்த இனிய குரலாலும், அதில் கூப்பியிருந்த சோகச்: சாயலாலும் முத்துராமலிங்கம் மிகமிகக் கவரப்பட்டான். வெறுங்குரலால் மட்டும் அவள் பாடுவதாகத் தோன்ற, வில்லை. மனத்தாலும் சேர்த்து இசைப்பதுபோல் இருந்தது. கீழே இறங்கிச் சென்று அத்தனை அழகாகப் பாடுவது யார் என்று பார்க்க வேண்டும் என்று அவனுக்குத். தோன்றியது. அந்த ஆவலை. அவனால் கட்டுப்படுத்திக். கொள்ள முடியவில்லை. * . .

பாரதியார் கவிதைப் புத்தகத்தைத் தான் படிப்ப: திகுப் பிரித்தவுடன் உடனிகழ்ச்சியாக இந்தது. குரல் கேட்கவே அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அந்தக் கவிதைகளை அவன் ஊக்கத்துக்காகவும், மன உயர்வுக்