பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.6 நிசப்த சங்கீதம்

தன் கும்பலில் கட்டழகுமிக்க ஒரு பெண்ணை அந்தப் பிரமுகரோடு காரில் அனுப்பி வைத்தான்.

பங்களாவில் எல்லாம் சகஜமாக இருந்தன. தாய் குரைக்காமல் சாதுவாகப் படுத்திருந்தது. சின்னியைக் கண்டதும் படு குவியோடு எழுந்து வாலாட்டியது. சிறுவர் கள் தென்பட்டார்கள். ஆயாக்கிழவி முகப்பில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தாள். - -

அதைவிடப் பெரிய ஆச்சரியம் உள்ளே வேறு பல

பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். முத்துராமலிங்கம்

சின்னின்ய அதுபற்றி விசாரித்தான். சின்னி சுலபமாகப் பதில் கூறினான் :

"இந்த டெப்போவில் சரக்குத் தீர்ந்து போனா வேற டெப்போவில் இருந்து சரக்கு வரும். வியாபாரம் நிக்காது. இது நாங்கள் நடத்தற எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும்! எதனாலயும் எதுவும் நிக்காது." -

"அவரு யாரு?"

'அரசியல்லே செல்வாக்குள்ளவரு.சொன்னா நாலும் நடக்கும். அதுசரி...பொடியங்க மாடியிலேயே பதுங்கிக் குங்கன்னு உனக்குச் சொன்னாங்களாமே; அதை மீறி. ரெய்டு நடக்கறப்ப நீ ஏன் கீழாலே வந்தே?” - -

- "என்னமோ தோணிச்சு...வந்தேன். இப்ப அதுக்காக

நான் வருத்தப்படலே சின்னி... .

"அவங்களுக்கும் நமக்கும் சண்டை ஒண்னுமில்லே. சும்மா ஊர் வாயை மூட இப்படி அஞ்சாறு மாசத்துக்கொரு வாட்டி 'ரெய்டு"ன்னு பேருக்குக் கண் துடைக்க வருவாங்க. . . - - -

'அப்படியானால் கிருஷ்ணாம்பேட்டையில் நடந்த ரெய்டு.: