பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO கித்திலக் கட்டுரைகள் களையும் அவிழ்த்து அவற்றில் இருந்த பொருள்களை யெல்லாம் அவர் முன் வைத்தோம். அவரும் அந்தப் பட்டியில் உள்ளபடி பொருள்கள் சரியாக இருக்கின்ற னவா என்று எண்ணிப் பார்த்து அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொண்டார். முதலில் சோப்புப் பெட்டியை எடுத்தார். அந்தப் பெட்டியின் மேல் எழுதியிருந்தவை. களையெல்லாம் நன்ருகப் படித்துக் கொண்டார். பிறகு அந்தப் பெட்டிக்குள் இருந்த அச்சிட்ட காகிதக் குறிப்பை எடுத்தார். அதையும் கூர்ந்து பார்த்து அதில் எழுதியுள்ளவைகளைப் படித்துக்கொண்டார். இவ்விதம் அவர் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கூர்ந்து பார்த்து அவைகளின் குணநலன்களை அறிந்து கொண்டு எங்களை அனுப்புவதற்குள் மணி 1-30 ஆகி விட்டது. எங்களுக்கோ நல்ல பசி. அந்தக் காலத், தில் இப்போதைப் போன்ற ஒட்டல்கள் @6ుడిaు. எங்கள் ஆசிரியர் அவருடைய குணநலனைக் குறித்து மிக அதிகமாக எங்களிடம் கூறியிருந்தார். ஆல்ை அவரோ எங்களைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை. நாங்கள் மிகவும் தயக்கத்தோடு அவர் வீட்டை விட்டுச் சில அடிகள் நடந்தோம். உடனே அடிகளார் வெளியே வந்து கை தட்டி எங்களை அழைத்தார். உணவு உட் கொண்டு சிறிது இளைப்பாறிச் செல்லுங்கள் என்று சொல்லுவதற்காக எங்களை அழைத்தார். என்று நாங்கள் எண்ணினுேம், மறுபடியும் உள்ளே சென்ற தும் நாங்கள் கடையில் வாங்கி வந்த சர்க்கரை கோதுமை போன்ற பொட்டணங்களை எங்கள் முன்னி ஆலயிலே அவிழ்த்தார். பிறகு தராசு, அரைப்படி, கால்படி முதலியவைகளையும் பலம் வீசை முதலியன குறிக்கப்