பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கித்திலக் கட்டுரைகள் நாலடியாரின் சொற்ருெடர்கள் :

  • பை மறித்தியற்றி யன்ன பாங்கிலா வாழ்க்கை.

(அப்.) கல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்.” (சுக்.) * பல்வீழ்ந்து காத்தளர்ந்து ’’ பகடுர் பசி கலிய’’ (சம்.) இறவாப் புகழ்படைத்து ஒளிரும் சுப்பிரமணிய பாரதியார் : அச்சமில்லை அச்சமில்லை' என்னும் பாடலைப் பாடி நம்நாட்டு மக்களின் அச்சத்தை ஒழித்து நமக்குக் குடியாட்சியை வாங்கிதந்ததற்குத் துணை புரிந் தவர் திருநாவுக்கரசரே ஆவர். அவர் தம் திருவதிகை வீரட்டத் தேவாரத்திலே வரும் 'அஞ்சுவது யாதொன் றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை' என்ற ஈற்றடி களை அமைத்துப் பாடியிருத்தலைத் தமிழ் இளைஞர் களுக்கு நான் நினைவூட்டுகின்றேன். தேவாரத்தில் ஆங்காங்கே காணப்படும் நயங்கள் எல்லாம் சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்திலே விளக்கிக் கூறியிருத்தலைத் தமிழன்பர்கள் ஒரு முறை யேனும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அன்றியும் இறுதியாக மேலும் இரண்டொன்று கூறி என் கட்டுரையை முடித்துக்கொள்ளுகிறேன். ஃ என்னும் ஆய்த எழுத்தின் அருமை பெருமை களை உணர்ந்து கொள்ளுதற்குச் சம்பந்தர் பாடியுள்ள "யாழ்.மூரி' என்னும் மேகராகக் குறிஞ்சிப் பாடலாகிய "மாதர் மடப்பிடியும்” என்னும் துவக்கத்தையுடைய பாடல் பெரிதும் ஆராய்ச்சிக்கு உரியது. அச்சிறுபாக்கப் பாடலை நான் படிக்கும் போது "இரண்டுருவாய அடிகள்” என்னும் அடிக்கு என்ன