பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () கித்திலக் கட்டுரைகள் உள்ளவாறே கூறப்படுவனவும் இயல்பு நவிற்சியே யாகும். முற்காலத்தே நம் தமிழ்தாட்டிலே பெரும் புகழ் கொண்டு விளங்கிய புலவர் பலரும் இயற்கை வருணனையினையே பெரிதும் போற்றிவந்தனர், அத் தகைய பெரும் புலவருள் ஒருவராகிய நக்கீரனுர் பாடிய நெடுநல் வாடிை என்னும் பாட்டில் வரும் குளிர்கால வருணனையினை உரைநடையில் ஒருவாறு சுருக்கிக் கூறுகின்றேன். ' உலகமெல்லாம் குளிரும்படி மேகம் கார் காலத்து மழையினைப் பெய்தது ; வளைந்த கோலினத் தாங்கிய ஆயர், அம்மழை வெள்ளத்தின் மிகுதியைக் கண்டு வெறுத்துத் தம் ஆடு மாடுகளை மேட்டு நிலங் களில் மேயவிட்டுந் தம் இருப்பிடம் நீத்து வேறு இடம் தேட நேர்ந்தமைக்கு வருந்தலாயினர். அவர்கள் அணிந்திருந்த பூமாலைகள் மழையில்ை நிலை குலைந்: திருந்தன. ஆதலின், அவர்கள் ஒன்று கூடித் தங் களிடமிருந்த நெருப்புச் சட்டியில் கையைக் காயவைத் துக் கன்னங்களில் ஏற்றிக் கொள்ளலாஞர்கள். ' குளிரின் மிகுதியால் ஆடுமாடுகள் மேய்தற் ருெழிலையும் மறந்து ஏங்கி நின்றன. குரங்குகள் கூனிட்டுக் கிடந்தன. மரங்களில் தங்கி இருந்த பறவை கள் வாடையின் கொடுமை பொருது நிலத்தே விழுந் தன. பசுக்கள் குளிர் மிகுதியால் தங்கள் கன்றுகளுக் குப் பால் கெடாது அவற்றை உதைத்துத் தள்ளின. ' மழை வெள்ளத்தின் வேகத்திற்கு ஆற்ருத கெண்டை மீன்கள் மெதுவாக நீர்வற்றிய மணல்