பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| H கித்திலக் கட்டுரைகள் கோள் யாது ? நன்ருகப் படிக்கவேண்டும். கற்ற கல் வியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். வருந்திப் பொருள் திரட்டவேண்டும். தொகுத்த பொரு ளினைப் பலருக்கும் வாரி வழங்குதல் வேண்டும். இவையே அவர்தம் குறிக்கோள். அக்குறிக்கோளுக்கு ஏற்ப இலக்கணப் பெரும் புலவராக விளங்கிய மயிலை சண்முகம்பிள்ளை என்பவரிடம் மிகவும் கவலையோடு பாடம் கேட்டார் ; புது முறையில் இளஞ் சிறுவர்களுக் காகப் பாடப் புத்தகங்கள் எழுதினர் ; பெரும் பொருள் ஈட்டினர் ; சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக இருந்து பேரும் புகழும் பெற்ருர் ; புலவர்கட்கும், ஏழை மாணவர்கட்கும், சுற்றத்தார்க்கும் தாம் ஈட்டிய பொருளினை வாரி வாரி வழங்கினர் ; என்றும் நிலைத்த புகழோடு அறுபது ஆண்டுகள் வாழ்ந்து மண்ணுலகி லிருந்து மறைந்தார். கல்விக் கடலாய் நம் நாட்டுச் சீர்திருத்த நோக்கங் கட்கெல்லாம் கலங்கரை விளக்கமாய், இலக்கண இலக் கிய ஆராய்ச்சிகளில் மிகவும் வல்லுநராய் இருந்து அண்மையில் மறைந்த பேராசிரியர் மறைமலை அடி களாரைக் குறித்து இந்தச் சுருங்கிய கட்டுரையில் என் ல்ை எழுதவே இயலாது. அவர் ஆங்கிலம், செந் தமிழ், வடமொழி ஆகிய இம்மூன்றினையும் ஆழ்ந்து கற்றவர் ; உடலை வன்மையாக ஆக்கிக் கொள்ளவும் உள்ளத்தைத் துய்மையாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் முயன்றவர். அன்றியும் அவர் தாமே தம் எளிய கல்லூரி வாழ்க்கையில் வரும் குறைந்த ஊதி யத்திலிருந்து மாதம் மாதம் மிகுத்து வைத்துக் காகிதம் வாங்கியும், அச்சு எழுத்துக்கள் வாங்கியும், அச்சுப்