பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கித்திலக் கட்டுரைகள் பம் எவ்விதமேனும் கட்டத் தீர்மானித்திருப்பதாகவும் எங்களிடம் கூறியிருந்தார். அத்தகைய நல்ல வாய்ப் பினை நாங்களும் நீங்களும் கொடுத்து வைக்கவில்லை. அந்த மணிவிழா நிறை வேறுவதற்கு முன்பாகவே நமது பேராசிரியர் இங்குள்ள எல்லோரையும் துன்பக் கடலில்-ஆழ்த்திவிட்டு, பேரின் பக்கடலிலே மறைந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவர் பெயர் என்றும் மறை யாது. அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு பேரும் புகழும் பெறுவதற்கு அவர் தம் அருந்தவக் குழந்தைகள் இன்றும் நல்ல நிலையிலே இருந்து வரு கிருர்கள். அவருடைய மாணவர்கள் ஆயிரக்கணக் கிலே நம் நமிழ் நாடெங்கும் இருந்து அரிய பெரிய தொண்டுகளை யெல்லாம் செய்து வருகிருர்கள். அவர் இயற்றியுள்ள அரிய பெரிய நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், நாடகங்களும் பிற வெளியீடுகளும் நம் தமிழ் நாட்டில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழர்கள் தம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ள வேண்டு மாளுல், கடற்கரை ஓரத்திலே சிறிது முயற்சி எடுத்து அவர் தம் திரு உருவை நினைவுச் சின்னமாக நாட்டு தல் வேண்டும் என்று நம் நாட்டு மக்களை நான் வேண்டிக்கொள்கிறேன்.