பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியரசரைக் கண்டேன் 79 தியை நம்நாட்டை விட்டே ஓட்டிவிடுகிறேன்" என்று மிகவும் ஆத்திரத்தோடு தம் இருப்பிடத்தை விட்டு எழுந்தார். உடனே அவருக்குப் பழைய மார்புநோய் வந்துவிட்டது. அப்போது அவர் தமக்குப் பழக்க மான மருத்துவர்களின் பெயர்களை யெல்லாம் கூறி அவர்களை அழைத்து வரும்படி எனக்குக் கட்டளையிட் டார். அவர்களெல்லாம் இறந்து போய்விட்டார்களே; உங்கள் நோய்க்குத் தங்களிடம் மருந்தே இல்லை யென்று அவர்கள் அப்போதே சொல்லிவிட்டார் களே' என்றேன். எங்கள் ஆசிரியர் சிறிதுநேரம் ஏதோ சிந்தனையிலிருந்து, பிறகு 'முத்து | இனியென் ல்ை இந்த மார்புநோயைப் பொறுத்துக்கொள்ள முடி யாது. இத்தகைய நோயாளியை ஏ ன் மீண்டும் உயிர்ப் பித்தாய் ? நீயும் நின் மாணவர்களுமாவது உடலைப் பாதுகாத்துக்கொண்டு நம் தமிழுக்குத் தீங்குவாரா வகையில் தொண்டு செய்யுங்கள்' என்று சொல்லிக் கொண்டே நான் வைத்திருந்த மருந்துப்புட்டியை வாங் கிப் படித்துப்பார்த்தார். பிறகு அந்த மருந்தில் கொஞ் சம் எடுத்துத் தம் தலையில் தெளித்துக் கொண்டார். உடனே அவர் பழையபடி நினைவுச் சின்னமாக மாறி விட்டார். நான் உடனே அந்தப் புட்டியில் என்ன எழுதி இருக்கின்றது என்று படித்துப்பார்த்தேன். உயிரோடு இருப்பவர்கள் மீது தெளித்தால் அவர்கள் உடனே இறந்துவிடுவார்கள். என்று அதில் எழுதப்பட்டிருந் தது. ஒற்றுமையில்லாத இந்த உலகத்திலே-பிற நாடுகளெல்லாம் ஏள னத்தோடு இகழ்ந்து நோக்கு கின்ற தன்மையிலுள்ள இந்தத் தமிழ்நாட்டிலே இருப்