பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - நினைவுக் குமிழிகள்-2

இவற்றைத் தவிர, சுமார் இரண்டு ஏக்கர் அளவும் ரூ 2000/-மும் மதிப்புள்ள ஆலத்துடையாம் பட்டியிலுள்ள ஒரு நஞ்சைநிலம் என் மாமியார் பேரில் ஏலம் எடுக்கப் பெற்றிருந்தது. இதையும் இந்தச் சமயத்தில் ஒருவரும் பேச வில்லை. இன்னும் சுப்பிரமணியத்தின் சதித் திட்டங்கள் செயற்படவில்லை என்பது மட்டிலும் எனக்குப் புரிந்தது. தவிர, இந்த விவரங்களையெல்லாம் என் மைத்துனர் தம் மாமனாருக்குச் சொல்லியிருக்க முடியாது. இன்னும் அவர் மாமனாரிடம் 'எடுப்பார் கைப்பிள்ளை” யாகவில்லை. அப்படி ஆக்கிக் கொள்ளவும் அவர் கனவிலும் கருதியிருக்க மாட்டார்; என் மைத்துனருக்கும் அப்படித் தன்னை ஒருவரும் ஆக்க முடியாது என்ற தன்னம்பிக்கை இருந்தது. இதனை நான் அறிந்தவாறே, சுப்பிரமணியமும் அறிந் திருப்பார்.

இவற்றைத் தவிர சுமார் 24 சவரன் எடையுள்ள தங்க ஒட்டியானம் ஒன்றும், 35 சவரன் எடையுள்ள காசுமாலை r ஒன்றும் என்மைத்துனர் வீட்டிலேயே இருந்து வந்தன. என் மனைவித் திருமேனியில் நாற்பது சவரன் மதிப்புள்ள நகை. களும், என் மாமியார் திருவுடம்பில் முப்பது சவரன் மதிப் புள்ள நகைகளும் இருந்து வந்தன. 1941 செப்டம்பரில் என் ஒன்றுவிட்ட தம்பியின் திருமணத்தின் பொருட்டு ஒட்டி யாணமும் காசுமாலையும் எங்களை வந்தடைந்தன. என் மைத்துனர் திருமணத்தின்போதும் அவை எங்களிடமே இருந்தன. பாதுகாப்பின் பொருட்டுக் கோட்டாத்துாரில் நம்பிக்கையுள்ள ஒரு செல்வர் வீட்டில் வைத்திருந்தோம். என் மைத்துனர் திருமணத்தின்போதுகூட அவற்றைப் பயன் 'படுத்தவில்லை. ஆக இாதி சவரன் மதிப்புள்ள சீதனமாக வரவேண்டிய நகைகள் எங்கள் வசத்திற்கு வந்துவிட்டன. ரு 2200 மதிப்புள்ள புரோநோட்டுகளும் எங்களை