பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம்-சென்னைப் பயணம் 111

அங்குத்தான் பார்ப்பது, அவற்றின்மீது ஆணை பிறப்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலை யில்தான் எங்கள் கோப்பின்மீது ஆணைபிறப்பிக்கப்பெற்றது. இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் எனக்குத் தெரிவித்தார் இராமச்சந்திர அய்யர். ஒன்றிரண்டு நாட்களில் ஆணையும் எனக்குக் கிடைக்கச் செய்தார்; நானே கையெழுத்து போட்டுப் பெற்றுக்கொண்டேன். -

இந்த மகிழ்ச்சிச் செய்தியை சின்னதுரைக்குத் தந்தி மூலம் தெரிவித்துவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கிவிட்டேன். உமாபதி ரெட்டியார், P. மாதுர்பூதம், T.S. இராமய்யா இவர்கட்குக் கடிதங்கள் எழுதித் துறையூரிலுள்ள மூன்று சினிமாகொட்டகை உரிமையாளர் களிடம் தொடர்புகொண்டு ஜூன் முதல் நான்காவது படிவம் திறக்கப்படுகிறது என்ற செய்தியை விளம்பரப் படுத்த ஏற்பாடு செய்தேன்; பத்து நாட்கள் தொடர்ந்து இந்த விளம்பரம் வந்துகொண்டிருந்தது. நழுவம் (slide) எழுதுதல் முதல் விளம்பரம் போடுதல்வரை அன்பு தான மாகவும் பெறச் செய்தேன். சினிமாகொட்டகையாளர்களும் மிக உவப்புடன் இந்தக் கைங்கரியத்தைச் செய்து மகிழ்ந் தனர். இரண்டு நாட்கள் கழித்து துறையூர் திரும்பினேன். சின்னதுரை கொடுத்த ரூ. 50/-க்கும் விரிவான கணக்கு களைக் காட்டினேன். இப்போதும் ரூ. 1.6.0 மீதி இருந்தது.

நான் சென்னையில் தங்கியிருந்த இடம் வாடகையின்றி அமைந்தது. ஒருநாளில் ஒருமுறை உணவு இராமச்சந்திர அய்யர் வீட்டில் பெற்றேன். இன்னும் ஒரு நாற்பது ரூபாய்ச் செலவு பலவிதங்களில் இனாமாகவே நடைபெற்றது. இவற்றையெல்லாம் துரைக்குத் தெரிவித்தேன். எதைப்பற்றி மகிழாவிட்டாலும் சிக்கனத்துடன் செயலாற்றியதையாவது உள்ளுர மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதை அறிவேன், -