பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குத் தொடர்கள் 135

மேல் தர முடியாது என்று சொல்லிவிட்டாலும், அவருக்கே அத்தொகைக்குக் கிரயம் எழுதித் தந்து சேந்தமங்கலத்தில் பதிவு செய்து தொகையைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு துறையூர் திரும்பினோம். பாசம், உறவு, முதலியவை எல்லாம் பணத்திற்கு முன் தவிடு பணத்தைப் பொடியானதை நினைத்துக் கொண்டேன்.

(4) என் மைத்துனரின் முதல் மனைவி இராஜாம்பாள் இதுகாறும் (சுமார் 10 ஆண்டுகள்) வாளா இருந்துவிட்டு என் மைத்துனர் பேரில் தான சாசனம்மூலம் சொத்துகள் வந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கட்குப் பெண் எடுத்ததுமூலம் உறவும் எங்கட்கு நீண்டகால உறவும் உடைய முத்தியாலுரெட்டியார் (பவித்திரம்) என்ற பெரிய வரின் உதவி கொண்டு வாழ்க்கைத் தேவைப்(Maintenance) பிராது ஒன்றை நாமக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது.

இதுகாறும் ஆகூழ் இருந்தமையால் சொத்து பெருகிக் கொண்டே வந்தது என் மைத்துனர் குடும்பத்தில்.இப்போது போகூழ் வரத் தொடங்கி விட்டது. இதற்கு உற்பாதமாக ஏற்பட்டவை மூன்று நிகழ்ச்சிகள். -

(1) பெண்கள் வழியாக வந்த சொத்தின் ஒரு பகுதி யைப் பிரித்துத் தன் தங்கைக்குக் கொடுத்திருக்கலாம். தன் தங்கையைச் சொந்தக்காரன் தலையில் கட்டிவிட்டால் அவனை ஏமாற்றிவிடலாம் என்று திட்டம் போட்டுத்தன் தங்கையை எனக்கு மணம் புரிவித்து ஏமாற்றியமை. இஃது ஒரு பெண் பாவம்.

(2) ஏழாண்டுகள் முதல் மனைவியுடன் சச்சரவுடன் வாழ்ந்தாலும் புத்திரப் பேறு ஏற்பட்ட பிறகு மனைவியை