பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத நிகழ்ச்சி 393

டாக்டர் செட்டியாரின் விருப்பம். நீங்கள் தலைமை யாசிரியராக இருக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். எப்படியானாலும் ஆகட்டும் என்றுதான் திரு. மேனனிடம் (முதல்வர்) சொல்வி உங்கட்குத் தந்தி கொடுக்கச் சொன்னேன்; கடிதமும் எழுதச் சொன்னேன்' என்றார். 'நாளை திரு. S. திருவேங்கடாச்சாரியாரிடம் பேசுங்கள். இன்னும் விவரங்கள் தருவார்’ என்று கூறி முடித்தார். அடுத்த நாள் திருவேங்கடாச்சாரியிடம் பேசி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத் துடன் அன்றிரவு திரு. கணேசன் அவர்கள் இல்லத்திலே தங்கியிருந்தேன். அன்றிரவு,

பக்தி யுடையார் காரியத்தில்

பதறார்! மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்குந் தன்மைபோல் . மெல்லச் செய்து பயனடைவார்; சக்தி தொழிலே அனைத்துமெனில்

சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்? வித்தைக் கிறைவா! கணநாதா!

மேன்மைத் தொழிலிற் பணியெனையே"

என்ற பாரதியாரின் பாடலை நாவில் நவிற்றிக் கொண்டே துயில் கொண்டேன்.

8. பா. க : வி.நா.மா. பாடல்-27.