பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றப் பாதையில் தகுதி பெறல் 51

பத்து நாட்களை அவர் எடுத்துக் கொள்ளலாம். இவருடைய மனைவி ஒரிடத்தில் மருத்துவ மனையில் கருவுயிர்ப்பதாகச் சேர்க்கப் பெற்றுள்ளாள். மக்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் உயர் கல்வி பெற்று வருகின்றனர். இவருடைய பயணப்படி கணக்கிடுமாறு கேட்கப் பெற்றிருந்தது. சரியாக விடையளித்தால் 25 மதிப்பெண்கள் தரப்பெறும் என்று வினாத்தாளில் கண்டிருந்தது. இந்தப் பயணப் படிக் கணக்கில் இரண்டு வகையான பயண வகைகள் உள்ளன. முதல் வகைக்கு ஒரு முதல் வகுப்பும், இரண்டாம் வகைக்கு 1-213 முதல் வகுப்பும் இருப்பூர்திக் கட்டணமாக எடுத்துக் கொண்டு கணக்கிடுதல் வேண்டும். இந்தக் கணக்கைச் சரியாகச் செய்வதற்கு ஒரு மணி முப்பது மணித்துளிகள் ஆயின; 25 மதிப்பெண்கள் பெறுவது உறுதியாயிற்று. மீதி 1; மணி நேரத்தை ஏனைய வினாக்களுக்கு விடையிறுக்க எடுத்துக் கொண்டேன். அவற்றிற்கு 25 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும். தேர்வில் வெற்றியடைந்தேன்.

எனக்குத் தெரிந்த பல அன்பர்கள் இத்தேர்வில் நான்கு தடவை, ஐந்து தடவை உட்கார்ந்து தோல்வியுற்றதை அறிவேன், அவர்களுள் ஒருவர் திரு. K. S. துரைசாமி ரெட்டியார் என்பவர். இவர் மாவட்டக் கழகத்தில் ஒர் *darsmirred (Local fund Inspector) usinfuriouaist; தூரத்து உறவினர். இவர் ஐந்து முறை தேர்வில் தோல்வி யடைந்தவர். அப்போது நான் பார்க்கர் பேனாவை வைத்துப் பயன் படுத்தி வந்தேன். அவர் இந்தப் பேனாவில் தான் ஏதோ "மர்மம் உள்ளது; அதனால்தான் முதல் தடவையிலேயே நான்வெற்றியடைந்தேன் எனக் கருதினார். அவர் கேட்டபடி அந்தப் பேனாவை அவருக்கு அன்பளிப்பாக உரிமையாக்கினேன். பின்னர் அவர் துறையூரிலிருந்து திருச்சிக்கு மாற்றப் பெற்றதால் அவர் தேர்வின் முடிவு பற்றி