54 நினைவுக் குமிழிகள்-2
சி. இரகுநாதன் பல்வேறு வகையில் ஆர். எம். ஸ்ட்ராத்தம் துரைக்கு மிகவும் வேண்டப் பெற்றவராக இருந்தார். எந்த அளவு அவரிடம் இவருக்குச் செல்வாக்கு இருந்தது என்பது துறையூருக்கு அருகிலுள்ள பெருமாள் மலையில் எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வேங்கடாசல பதிக்குத்தான் வெளிச்சம்: அக்காலத்தில் கல்வித்துறையில் பணியாற்றிய அலுவலர்கள், பல்வேறு நிலைப்பள்ளிகளில் பணியாற்றிய தலைமையாசிரியர்கள் சி. இரகுநாதனைக் கண்டு உண்மையிலே அஞ்சினவர்கள் சிலர் அஞ்சுவதாக நடித்தவர்கள் பலர். ஆனால் இஃது ஒரு மாயத் தோற்றம் என்பதை உணர்ந்தவர்கள் சி. சிங்கார வேலு முதலியார், கே. எல். பழநிசாமி பிள்ளை போன்ற ஒரு சிலரே. ஆனால் இந்த மாயத் தோற்றத்தில் அதிகமாக ஒன்றும்இராது என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது. என் சொந்த எண்ணத்தில் எழுபவை யாவும் பெரும்பாலும் சரியாக இருக்கும். இருந்தாலும் அகவையில் இருபத்தைந்து எட்டாதவனாக இருந்தமையால் மூத்தவர்களைக் கலந்து ஆலோசியாமல் எந்தச் செயலிலும் இறங்குவதில்லை. எனக்கு அநுபவம் மிகக் குறைவாக இருந்த காலத்தில் எனக்கு மிகவும் உண்மையாக உதவியவர்கள் முதலியாரும் பிள்ளையவர் களும்தான். எப்பொழுதும் இவர்களை நன்றியுடன் உன்னுவேன்; மரியாதையுடன் போற்றுவேன். ஒரு சில ஆண்டுகளில் ஆத்தூர் போன்ற இடங்களிலுள்ள கழக உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி மிக்க புகழ்வாய்ந்த பி. ஆர். சுப்பிர மணிய பிள்ளை நாமக்கல் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த நாள் முதல் எனக்கு நெருங்கிய நண்பரானார். எங்கள் காலத்தில் பளளி விழாக்களை எங்கள் வீட்டுத் திருமணவிழாபோல் நடதது வோம், எங்கள் பள்ளிவிழாக்களுக்கு அவர் தவறாமல