பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - நினைவுக் குமிழிகள் .2

பள்ளி நிர்வாகம் காலத்திற் கொவ்வாதது. உயர்நிலைத் தொடக்கப் பள்ளியிலேயே ஆசிரியர்கட்குச் சரியான ஊதியம் இல்லை. ரூ 10, ரூ 12, ரூ 15, ரூ 18... என்று தான் ஊதியம் வாங்குகின்றனர். அரசு ஆசிரியர்கட்குத் தரும் மானியத் திற்குமேல் சிறிதுகூடச் சேர்த்துத் தருவதில்லை. தலைமை யாசிரியர்கட்கே ரூ 40/- எட்டவில்லை என்பதை அறிவேன். தொடக்கப் பள்ளியிலாவது அணா கணக்கில் கட்டணம் தண்டுகின்றார்கள். உயர்நிலைப்பள்ளியில் ரூபாய் கணக்கில் தண்டுவார்கள். கணக்கில் ஊழல் செய்து கொள்ளை அடிப் பார்கள். இதைத்தான் நான் இன்றைய தனியார் உயர் நிலைப்பள்ளிகளில் காண்பது. உங்கட்குக் கூட ரு 65| த்ர மாட்டார்கள்; அது தருவதுதான் நியாயம். நான்காவது படிவம் வந்தால் ரூ. 110| தருவார்களா? இப்போது உங்கள் ஊதியம் ரூ. 35)- க்கு மேல் இருக்காது என்பதை நான் ஊகித்து அறிவேன்; நீங்களும் உண்மையை மறைப்பீர்கள். அப்படி ஏதாவது ரூ. 40- அல்லது ரூ 45/- ஆகத் தந்தால் ரூ 10/- ஆவது நீங்கள் திருப்பித் தரும் திட்டம் இருக்கும். உண்மைதானே! ஏன் விழிக்கின்றீர்கள்?

கான் நான் புன்முறுவல் செய்து வாளா இருந்தேன். வி.ஆர்.ஆர். உங்களுக்காவது நான்காவது பாரம் தொடங்கப் பரிந்துரைக்கின்றேன். மகிழ்ச்சியாகத் திரும்புங் கள்.

"வணக்கம் ஐயா! மிகவும் நன்றி' என்று விடை பெற்றேன். திரு சாம்பசிவம் பிள்ளை உணவுக்கும் தங்கு வதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். அவர் வி.ஆர். ஆரிடம் பேசி இரவு ஒன்பது மணிக்கு வெளிவந்தார். அவரிடம் பதினைந்து மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தேன். 'பள்ளி நிர்வாகம் அவருக்கு மன நிறைவு தராவிடில், பரிந்துரை செய்யார். இனிமையாகப் பேசியது உங்கட்கு மகிழ்ச்சியூட்டு