பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛姆要 நினைவுக் குமிழிகள்-3 ஜீவிக்கையில் உண்டான ஆசையாலே பின்னையும் அங்கீ கரிக்கைக்கு இடம் பர்ாத்துத் திரியும் தனக்குத் தகுந்த இடம் பெற்ற அளவில் என்றபடி. என் ஊரைச் சொன்னாய்...நிழலைக் கொடுத்தாய்’ என்றாற் போலே சிலவற்றை ஏறிட்டு என்றது, அவ்வூர் இவ்வூர் என்று இவன் பல ஊர்களையும் சொல்லா நிற்க . கோயில், திருமலை முதலாகத் தான் உகந்த ஊர்களிலே ஏதேனும் ஒன்றைச் சொன்னால், அதனையே பற்றாசாகக் கொண்டு என் ஊரைச் சொன்னாய்’ என்றும்; அவர் இவர் என்பன போலே சொல்லா நிற்க, ஒருவன் பெயரைச் சொல்லுகிறதாக இறைவன் திருப்பெயர்களில் ஒன்றைச் சொன்னால் அவ்வளவைக் கொண்டு என் பெயரைச் சொன்னாய்’ என்றும்; பாகவதர் சிலர் காட்டிலே செல்லா நிற்க, அவர்களை வருத்திக் கையில் உள்ளதைப் பறிப்ப தாக வழிப்பறிக்காரர் முயற்சி செய்த அளவில், தன் காரியமாகப் போகின்றான் சேவகன் ஒருவன் அவர்கள் பின்னே தோன்ற அவனை இவர்களைப் பாதுகாப்பதற் காக வருகின்றானாக நினைத்து, அவர்கள் அஞ்சிப் பறியாதொழிய, அது காரணமாக அந்தச் சேவகனை "என் அடியாரை நோக்கினாய்’ என்றும்; ஒருவன் வேனிற் காலத்திலே தன் வயல் தீயப்புக்கவாறே, நீர் உள்ளவிடத் தினின்றும் வயலுக்கு வரும்படி நெடுந்துாரத்திலே துலை யிட்டு இறையா நிற்க, மருபூமியிலே (பாலை நிலம்) நெடுந்துாரம் நடந்து, சிறிது தண்ணீர் பெறில் நம் உயிர் தரிக்கும்’ என்னும்படி இணைத்து வரும் பாகவதர் சிலர் அவன் அறியாமல், அந்தத் தண்ணீரிலே தங்கள் திருவடி முதலானவற்றை விளக்கி இளைப்பாறிப் போனால் அது அடியாக என் அடியார் விடாயைத் தீர்த்தாய்' என்றும்; ஒருவன் தனக்குச் சூது சதுரங்கம் பொருகைக்கும் காற்றை விரும்பும்போது வந்து இருத்தற்கும் ஆகப் புறத்திண்ணை கட்டி வைக்க மழையிலே நனைந்தவர் .களாய் எங்கே ஒதுங்குவோம்' என்று வருகிற பாகவதர்