பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமன் உண்மையில் தருமனே 2 & 3. நீஇதற்கு இலக்கம் ஆகி நின்றனை!’ என்று, கோபத் தீஎழப் பொடிக்கும் கண்ணும் சிரிப்பெழும் எயிறும் ஆகி மூஇலைச் சூலம் தன்னால் முனிதலை துணிந்து வீழ ஏவலில் பழுதில் பூதம் இவனையே எறிந்தது அன்றே!" என்று காட்டுவர். இப்பாடலை உணர்ச்சிவசப்பட்டு ராய. சொ. விளக்கும்போது இன்னொரு முறை கேட்க வேண்டும் என்பது போலிருக்கும். தம்பியரைத் தேடிய தருமன் அவர்தம் சேவடிச் சுவட்டினை அடையாளமாகக் கொண்டு அவர்கள் மடிந்த இடத்திற்கு வந்து சேர்கின்றான். அண்ட கோளகை அணையதுஓர் ஆதடத் திரத்தால் மண்ட லங்கள்ஈர் ஒன்பதும் புரந்திட வல்லான் சண்ட மாருதி எழுதிய தாழ்மணல் எழுத்தைக் கண்டு நஞ்சம்,இக் கயத்தறல் என்பது கண்டான். ' (கோளகை-வட்டம்; ஆதபத்திரம்-குடை மாருதிபீமன்: அறல்-நீர்1 என்று தம்பியர் மாண்ட விவரத்தை அறிகின்றான். தானும் நெஞ்சினை நனைக்கும் கருத்தன் ஆகி அக்கயத் திடைச் சென்று அங்கையால் நீரை அள்ளிப் பருக முயலும் போது அசரீரி, - - 6. டிெ. டிெ-44 7. டிெ டிை-50